வரதட்சனை கொடுமையால் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை!! உறவினர்கள் மறியல்!!!

 
காளியம்மாள்

 

திருவாரூர்மாவட்டம்  லட்சுமாங்குடி  நீலாவதி நகரை சேர்ந்தவர் ரவி இவரது மூத்த மகன்  சூரியா. இவருக்கும்  காளியம்மாள் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.. இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில், கணவர் சூரியாவின் குடும்பத்தினர்  காளியம்மாளிடம் தொடர்ந்து வரதட்சனை கேட்டு கொடுமை செய்து வந்துள்ளனர்

. இதனால் மனமுடைந்த காளியம்மாள் தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு  முயற்சித்துள்ளார்.  இந்நிலையில் காளியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள்  மற்றும் பொதுமக்கள் காளியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  உயிரிழந்தார்.

வரதட்சணை
இந்நிலையில் காளியம்மாளை  வரதட்சணைக்காக கொடுமை செய்த கணவர் சூரியா,  மாமனார் ரவி மற்றும் அவருடைய இரண்டாவது மற்றும் மூன்றாவது மனைவியான சுமதி , லலிதா ஆகிய இருவரையும்   காவல்துறையினர் உடனடியாக கைது செய்யவேண்டும் என  கூறி உறவிகர்கள் அரசு மருத்துவமனையில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மறியல்

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூத்தாநல்லூர் காவல் நிலைய  காவல் அதிகாரிகள் மற்றும் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா , திருவாரூர் துணை காவல் கண்காணிப்பாளர் சிவராமன்  ஆகியோர்  நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர் . அப்போது காளியம்மாள் தீ குளித்து தற்கொலை செய்துகொள்ள காரணமாக இருந்தவர்களை உடனடியாக கைது செய்ய கோரி உறவினர்கள் பிரேதத்தை வாங்க மறுத்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கோட்டாசியர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள்   வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . பின்னர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்ததன் பேரில் அவர்கள் கலைத்து சென்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web