பைக் அருகே இளைஞர் எரித்து கொலை! போலீசார் தீவிர விசாரணை!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. மளிகைக்கடைக்காரர். இவரது மகன் விஜய்.இவர் கடந்த 12ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு விஜய்யின் தந்தை தெள்ளாறு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சு.நாவல்பாக்கம் முருகன் கோவில் அருகே உள்ள குளத்தின்பை அருகில் விஜய்-யின் பைக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன் அருகில் எரிக்கப்பட்ட நிலையில் உள்ள சடலம் ஒன்று கிடந்துள்ளது. பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் அந்த உடலை மீட்டு தடய அறிவியல் சோதனைக்காக சென்னை மைலாப்பூருக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் இது கொலையாக இருக்குமோ என்ற கோணத்தில் அப்பகுதியை சேர்ந்த 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போன வாலிபர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!