10 முறை எம்.எல்.ஏ வாக இருந்தவர் காலமானார் ... குடியரசு தலைவர் இரங்கல் !

 
சுக்னனா குமாரி தியோ

ஒடிசாவில் 10 முறை எம்எல்ஏவாக பதவி வகித்த சுக்னனா குமாரி தியோ, வயது முதிர்வால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 9ம் தேதி நள்ளிரவு ஒரு மணியளவில் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.முன்னதாக, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக முதல்வர் நவீன் பட்நாயக், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்துவிட்டுச் சென்றார். அதெல்லாம் சரி யார் இந்த சுக்னனா குமாரி தியோ ? சென்னையில் கடந்த 1937ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மன்னர் ஆர்.வி.எம்.நீலாடி தியோவுக்கு மகளாகப் பிறந்த சுக்னனா, சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டப்படிப்பை முடித்தவர். ஒடிசா கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கல்லிகோட்டின் சமஸ்தானத்தின் அரசர் ராமசந்திர மர்தராஜ தியோவின் மருமகளாவார், ஒடிசாவில் உள்ள மக்களால் ’மகாராணி’ என அழைக்கப்பட்டார்.

சுக்னனா குமாரி தியோ

1960ம் ஆண்டு தொடங்கிய அவருடைய அரசியல் வாழ்க்கைப் பயணத்தில், முதன்முதலில் 1963ம் ஆண்டில் கல்லிகோட் தொகுதியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளராக மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து, 1974ல் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கல்லிகோட்டில் இருந்து 8 முறையும், கபிசூர்யாநகரில் இருந்து 2 முறையும் எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

rip

1985ல் கல்லிகோட்டிலிருந்து பிஜு ஜனதா கட்சி சார்பாக மீண்டும் வெற்றிபெற்ற பிறகு 2014ம் ஆண்டுவரை நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் அவர் தோல்வியடையவில்லை. 2019 சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. மொத்தத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா கட்சி சார்பில் 1963, 1974, 1977, 1985, 1990, 1995, 2000, 2004, 2009 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஒடிசா அரசியலில் நீண்டகால எம்.எல்.ஏவாக இருந்தவர் என்ற பெயரைப் பெற்றவர் ஆவார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web