பகீர்.. 16 வயது சிறுவன் கொலை செய்த பின் நடனம்...கொடூரத்தின் உச்சம்...!!

 
சிறுவன்

வடகிழக்கு டெல்லியின் வெல்கம் பகுதியில் உள்ள ஜந்த் மஸ்தூர் காலனிப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11.15 மணியளவில் வந்து கொண்டிருந்த வாலிபரை ஒரு சிறுவன் வழிமறித்துள்ளார். அத்துடன் வாலிபரிடம் உள்ள பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால், வாலிபர் பணத்தை தரமறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், தன்னிடமிருந்த கத்தியால் வாலிபரை சரமாரியாக குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் வாலிபர் கீழே சாய்ந்தார். அவரது பையில் இருந்து 350 ரூபாயை எடுத்துக் கொண்டு சிறுவன் ஓடிவிட்டார்.


 

அப்பகுதியில் சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபரை, ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே வாலிபர் உயிரிழந்து விட்டதாக கூறினார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அத்துடன் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வாலிபரை கத்தியால் குத்தி கொள்ளையடிக்கும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து சிறுவனை போலீசார் நேற்று கைது செய்ததுடன், அவரிடமிருந்து கத்தியைப் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து துணை கமிஷனர் ஜாய் டிர்கி கூறியதாவது, நேற்று முன்தினம் இரவு சுமார் 11.15 மணியளவில் 18 வயதுடைய வாலிபர் ஒருவர் வெல்கம் பகுதியில் உள்ள ஜந்தா மஸ்தூர் காலனியில் இறந்து இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

டெல்லி போலீஸ்

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவின் பதிவுகள் கிடைத்துள்ளன. சிசிடிவி காட்சிகளில், 18 வயதுடைய வாலிபரை குற்றவாளி கத்தியால் குத்தி இழுத்து வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன. மேலும் அந்த வாலிபர் இறந்ததை உறுதி செய்ய அவரது கழுத்தில் குற்றாவளி பலமுறை குத்தியதுடன், ஒருகட்டத்தில் சடலத்தின் மீது நடனம் ஆடியுள்ளான். கிட்டத்தட்ட 60 முறை கத்தியால் குத்தியிருக்கலாம்.

அவர்கள் இருவருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று தெரிகிறது. வாலிபரிடம் இருந்த பணத்தை திருடும்போது தடுத்ததே கொலைக்கான காரணம் என்று கூறப்படுகிறது. குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடம் கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்படுகிறது. சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. தடயவியல் குழுவினரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு சோதனை மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர் என்று கூறினார்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

From around the web