பெரும் சோகம்... தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி... ...!!

 
மணிமாறன்


 ராணிப்பேட்டை ஆட்டோ நகர் சீனிவாசன் பேட்டையில் வசித்து வருபவர் முத்துக்கிருஷ்ணன். இவருக்கும் வன்னிவேடு பகுதியில் வசித்து வரும் மணிமேகலைக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்னால் திருமணமாகியது. இந்நிலையில் இவர்களுக்கு  2வயதில் மணிமாறன் என்னும் மகன் இருந்தான். மணிமேகலைக்கு 3 மாதங்களுக்கு முன் 2ஆவதாக  மற்றொரு ஆண்குழந்தை பிறந்தது. இதனையடுத்து அவர் தன் தாய் வீட்டில் முதல் மற்றும் 2வது குழந்தையுடன் இருந்து வந்ததாக தெரிகிறது.

கடல் நீர் மூழ்கி தண்ணீர் மரணம்

நேற்று மாலை வீட்டின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மணிமாறன்  அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடினான். தாய் மணிமேகலைக்கு காது பிரச்சனை இருந்ததால் குழந்தை அலறிய சத்தம் கேட்கவில்லை. நீண்ட நேரம் கழித்து குழந்தையை காணாமல் அக்கம் பக்கத்தில்தேடியுள்ளனர். அப்போது வீட்டில் தண்ணீர் தொட்டியில் குழந்தை இருப்பதை தாயும் உறவினர்களும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இறந்த குழந்தை உயிருடன் வந்த நிகழ்வு

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. திடீரென குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web