தடுப்பூசி போட்டதும் 3 மாத குழந்தை பலி... வயிற்றில் அடித்து கதறி துடித்த தாய்!!

 
சுஜன்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி பகுதியில் வசித்து வருபவர்  சூரியமூர்த்தி. இவரது மகன் கபிலன் .   மனைவி ஏஞ்சலின் ருபீஸியா .  கபிலன் திருப்பூர் மாவட்டத்தில்  தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார். இதனால் அவர் தனது மனைவியுடன் நூற்பாலையில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.  இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை  சுஜன்.  இந்த குழந்தைக்கு ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.  

தடுப்பூசி
இந்நிலையில்  முத்தாண்டிபாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று 2வது தடுப்பூசி போட்டனர். பின்னர் வீடு திரும்பிய நிலையில் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது.  திடீரென  நேற்று காலை குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கிவிட்டது.   அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை தூக்கிக் கொண்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ஓடினர்.  
அங்கு பரிசோதித்த மருத்துவர்   குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.  குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து குழந்தையின் பெற்றோர் தரப்பில்  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  

ஆம்புலன்ஸ்


புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.   குழந்தையின் உடலை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தடுப்பூசி போட்டதால் குழந்தை இறந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என  பல்வேறு கோணங்களில்  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பூசி போடப்பட்ட மறுநாள் 3 மாத ஆண் குழந்தை உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் , அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web