திடீரென மாயமான சிறுமி.. 3 நாள் கழித்து சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி!

 
ஆர்த்தி

புதுச்சேரி சோலை நகரை சேர்ந்தவர் நாராயணன் மற்றும் அவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், இரண்டாவது மகள் ஆர்த்தி (9) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஆர்த்தி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென காணாமல் போனார். அவரை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் பெற்றோர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடி வந்தனர். சிறுமி சென்ற பாதைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் தான், காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் சிறுமியின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவலறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web