நடுவழியில் பிரசவ வலி... ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை.. குவியும் பாராட்டுக்கள்!

 
தங்கப்பாண்டி - பூபதி

தேனி மாவட்டம், போடி, சில்லமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள அழகர்சாமி தெருவைச் சேர்ந்தவர் விஜயன்-பராசக்தி தம்பதி. பராசக்தி  கர்ப்பமாக இருந்த நிலையில், நேற்று காலை திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது கணவர் விஜயன் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.

108 ஆம்புலன்ஸ் டிரைவர் தங்கப்பாண்டி, மருத்துவ உதவியாளர் பூபதி ஆகியோர் கர்ப்பிணி பெண் பராசக்தியை ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பராசக்திக்கு பிரசவ வலி அதிகரித்ததையடுத்து, மருத்துவ உதவியாளர் பூபதி ஆம்புலன்சில் பிரசவம் பார்த்தார். இதில் பராசக்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து, பிறந்த குழந்தையை போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் தங்கப்பாண்டி மற்றும் மருத்துவ உதவியாளர் பூபதி ஆகியோரின் துணிச்சலை மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web