பாஜக நிர்வாகி பட்டியலின இளைஞர் மீது வீடு புகுந்து தாக்குதல் ... தட்டித் தூக்கிய காவல்துறை!
ஈரோடு மாவட்டத்தில் பாஜக நிர்வாகி பட்டியலின இளைஞர் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி கவின்குமார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் அரசலூர் பேரூராட்சி 6வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கவின் குமார். இவர் வெற்றிக்கு பிறகு தம்மை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
இதனையடுத்து இவருக்கு பாஜக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது . இந்நிலையில் குள்ளரங்கன்பாளையத்தில் வசித்து வரும் கல்லூரி மாணவர் ரமணிச் சந்திரன் கழிவு நீர் பிரச்சனை குறித்து கவுன்சிலரிடம் புகார் அளித்தார். அப்போது கவின் குமாரின் மனைவி செல்போனில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து ரமணிசந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்காக கவின் குமார் தனது நண்பர்கள் 3 பேருடன் அழைத்துக்கொண்டு ரமணிசந்திரன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டிலிருந்த ரமணிசந்திரன் மற்றும் அவரது தாயாரை கடுமையாக தாக்கியுள்ளார். அத்துடன் வீட்டிலிருந்த பொருட்களையும் அடித்து உதைத்து சேதப்படுத்தினார். இந்த கைகலப்பில் படுகாயம் அடைந்த கோகிலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!