விளையாட்டு விபரீதமானது... ஊஞ்சலில் விளையாடிய சிறுவன் கழுத்து இறுகி பலி!!
சென்னை கண்ணகி நகர், 2 அடுக்கு, 54வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் வேலாயுதம். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களின் இளைய மகன் செல்வா , தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். அவர்களது வீட்டில் குழந்தைகள் உறங்க கட்டப்படும் தொட்டில் போன்ற ஊஞ்சலை புடவையில் கட்டிவிட்டுள்ளனர். வீட்டில் தந்தை வேலாயுதம் கண்ணிற்கு மருந்து விட்டுக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தார் .
தாய் தனது மூத்த மகனை வெளியில் அனுப்பி விட்டு வீடு திரும்பினார். இரண்டிற்கும் இடைப்பட்ட நேரத்தில், கட்டிவைக்கப்பட்டிருந்த புடவை ஊஞ்சலில் சிறுவன் செல்வா சுற்றி, சுற்றி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கழுத்தில் சிக்கி கொண்டுள்ளது. இந்நிலையில் வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர் செல்வா சுயநினைவின்றி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் சிறுவனின் உறவினர் சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு சிறுவனின் பெற்றோர் கதறி துடித்தனர். தகவல் அறிந்து வந்த கண்ணகி நகர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஊஞசல் விளையாட சென்ற சிறுவன் ஊஞ்சலே எமனாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...