தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. துரத்தி துரத்தி கடித்த நாயால் பரபரப்பு..!
தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுவனை நாய் துரத்தி துரத்தி கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பெரிய புளியம்பட்டி, சின்ன புளியம்பட்டி, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட நகரின் அனைத்து இடங்களிலும் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில், இன்று சின்னபுளியம்பட்டி முனியாண்டி தெருவில் சுற்றித்திரிந்த நாய்கள் கூட்டம், அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த வெற்றிமாறன் என்ற சிறுவனை துரத்திச் சென்று கடித்ததில், சிறுவன் முகம் உட்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தெருநாய்களால் கடிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க