அதிர்ச்சி வீடியோ... நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து.. 4 பேர் உடல் நசுங்கி பலி... !
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள காக்கிநாடா - சின்னம்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று பழுதாகி நடுவழியில் நின்று விட்டது. இன்று அதிகாலை டயர் வெடித்ததால் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு பணியாளர்கள் சிலர் பழுதுபார்த்து கொண்டு இருந்தனர். அந்த வழியாக ஆர்.டி.சி பேருந்து வந்த நிலையில் இந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
లారీ పంక్చర్ చేస్తున్న చేస్తున్న వారి మీదకి దూసుకెళ్లిన ఆర్టీసీ బస్సు.. నలుగురు మృతి
— Telugu Scribe (@TeluguScribe) February 26, 2024
కాకినాడ - చిన్నంపేట జాతీయ రహదారి మీద లారీ పంక్చర్ చేస్తున్న నలుగురు మీదకి దూసుకెళ్లిన సూపర్ లగ్జరీ బస్సు.
సమాచారం అందుకున్న పోలీసులు సూపర్ లగ్జరీ బస్సును వెంబడించి పట్టుకున్నారు. pic.twitter.com/12OLc9O43c
இந்த கோர விபத்தில் லாரியின் அடியில் இருந்த பணியாளர்கள் 4 பேரின் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அரசு பேருந்தை காவல் துறையினர் துரத்திப் பிடித்தனர்.இந்த விபத்து மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து அருகில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!