நடிகர் ஜி.பி.முத்து உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு... பெண்ணை தாக்கியதாக புகார்!

 
 ஒரு தெருவே காணாமல் போயிருக்கு... கண்டுபிடிச்சு தாங்க... கலெக்டரிடம் ஜிபி முத்து கோரிக்கை!

உடன்குடியில் பெண்ணை தாக்கியதாக நடிகர் ஜி.பி.முத்து உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரம் கூலத்தெருவைச் சேர்ந்தவர் முத்து மகேஷ். இவரது மனைவி பால அமுதா (45). கடந்த 2-ந் தேதி முத்து மகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்திரை பிரபலமான நடிகர் ஜி.பி.முத்துவின் மகன்கள், சைக்கிளில் இருபுறமும் சென்றனர். 

தூத்துக்குடி

சாலையின் இருபுறமும் ஏன் சைக்கிள் ஓட்டுகிறீர்கள், ஒருபுறமாக ஓட்டுங்கள் என்று முத்து மகேஷ் கூறினாராம். இதுகுறித்து ஜி.பி.முத்துவிடம், அவரது மகன்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஜி.பி.முத்து, அவரது மனைவி அஜிதா, தம்பி இசக்கிமுத்துவின் மனைவி அனிதா, தந்தை கணேசன் ஆகிய 4 பேரும் முத்து மகேஷ் வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவரை வெளியே அழைத்தனர். 

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

இதற்கு அவர் மறுத்ததால் அங்கிருந்த பால அமுதாவை 4 பேரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவரது தலை, கை, முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர் உடன்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பால அமுதா கொடுத்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார், ஜி.பி.முத்து உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?