50 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை... மீட்பு பணிகள் தீவிரம்!

 
கேஷாபூர்

புது டெல்லியின் கேஷாபூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்ததாக நகர காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கேஷாபூர் மண்டி பகுதியில் உள்ள டெல்லி ஜல் போர்டு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 40-50 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறி விழுந்தது.

முதற்கட்ட தகவல்களின்படி, டெல்லி தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் டெல்லி போலீசார் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்த இடத்திற்கு இணையாக மற்றொரு பள்ளம் தோண்டி மீட்பு பணியை தொடர்ந்து வருகிறோம் என தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web