பைக் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் பலி!! பயங்கரம்...

 
லட்சுமி நாராயணன்

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் வசித்து வருபவர்  லட்சுமி நாராயணன் .  இவர் சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் விடுதியில்  தங்கி 4ம் ஆண்டு சட்ட படிப்பு படித்து வந்தார். இவர், சம்பவத்தன்று பெசண்ட் நகர் கடற்கரையில் மூன்லைட் சினிமா பார்க்க சென்றுள்ளார்.

விபத்து


படம் பார்த்து விட்டு  அதிகாலை 4 மணி அளவில் உடன் படிக்கும் நண்பரான ரோகித்துடன் பைக்கில்   பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தார். ரயில் நகர் சந்திப்பு அருகே வந்தபோது நின்றிருந்த லாரி மீது லட்சுமி நாராயணன் மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற லட்சுமி நாராயணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த ரோகித்தை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆம்புலன்ஸ்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர்  விரைந்து வந்தனர். இந்த சம்பவத்தில் கோயம்பேட்டை  சேர்ந்த லாரி ஓட்டுநர் சுகுமாரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது  நிலையில், அஜாக்கிரதையாக செயல்படுதல் ,  மரணத்தை விளைவித்தல் உட்பட  3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்நிலையில்  உயிரிழந்த லட்சுமி நாராயணன், அடிக்கடி பைக் சாகசங்கள் செய்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவிட்டு வந்ததும் தெரியவர, அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web