15000 பேருக்கு விடிய விடிய ஆடு, கோழி , பன்றி கறிவிருந்து... களைகட்டிய கோவில் திருவிழா... !

 
கறிவிருந்து

 நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நாமகிரி பேட்டையில் ஆர்.புதுப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பண்ணன் கோயில் அமைந்துள்ளது. இங்கு  நேற்று பிப்ரவரி 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் 15,000 பேருக்கு விடிய விடிய சுடச்சுட சமபந்தி கறி விருந்து பரிமாறப்பட்டது. இந்த  கோவிலில் ஒவ்வொரு ஆண்டும்  தை மாதம் கடைசி வாரம் ஞாயிற்றுக்கிழமை முப்பூசை விழா நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

கறிவிருந்து

இந்த திருவிழாவிற்காக  நேற்று இரவு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன.  பூசாரிகள் பொங்கல் வைத்து பூஜை செய்தனர். அதன் பிறகு கோயில் முன்பு ஆடு, பன்றி, கோழிகளை பலியிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. வேண்டுதல் நிறைவேறிய பிறகு பக்தர்கள் பச்சரிசி, கோழி, ஆடு, பன்றிகளை கொண்டுவந்து சுவாமிக்கு காணிக்கையாக  செலுத்தினர்.  இதனையடுத்து 1000 கிலோ ஆட்டுக்கறி, 1400 கிலோ பன்றிக்கறி, 100 கிலோ கோழிக்கறி என 2,500கிலோ கறி சமைக்கப்பட்டது. பெரிய  பெரிய பாத்திரங்களில்  மெகா விருந்து தயாரானது.

கறிவிருந்து

இங்கு  விடிய விடிய பொதுமக்களுக்கு கறிவிருந்து வழங்கப்பட்டது. இதில் உள்ளூர் மட்டுமின்றி சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 15000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி வரிசைகள்  ஏற்படுத்தப்பட்டு பாக்குமரத்தட்டில் அசைவ உணவு பரிமாறப்பட்டது. விவசாயம்  செழித்து ஆரோக்கியம் பெருகி  மக்கள் செழிப்பாக வாழ  கடந்த 100 ஆண்டுகளாக இந்த சமபந்தி கறி விருந்து விழா நடத்தப்பட்டு வருவதாக  விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web