உயிரைக் கொல்லும் ஜாம்பி வைரஸ்... பருவநிலை மாற்றத்தால் பெரும் ஆபத்து... !

 
ஜாம்பி வைரஸ்

2020 ல் சீனாவில் தொடங்கிய கொரோனா  உலகம் முழுவதும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது.  லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கானோர் பாதிப்பு அடைந்தனர்.  தற்போது  சைபீரிய பகுதியில் சில ஆபத்தான வைரஸ்களை  ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பருவநிலை மாற்றத்தால் அடுத்தடுத்து பெருமழை, வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களை மனிதகுலம் சந்தித்து வருகிறது. ஆனால் இதைவிட மோசமான புதுவிதமான பாதிப்பும் ஏற்படக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.  

ஜாம்பி வைரஸ்

வடதுருவத்தை பொறுத்தவரை  ஆர்டிக் பகுதியில் வருடம் முழுவதும் உறைபனி காணப்படும். இந்த   அழகுக்கு அடியில் பெரும் ஆபத்து ஒளிந்துள்ளது.  பணிக்கு அடியில் பல்லாயிரம் வருடங்களாக வைரஸ் கிருமிகள் உறங்கிக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  தற்போது அதிக வெப்பநிலை உயர்வு காரணமாக ஆர்டிக் பனிக்கட்டிகள் உருகத் தொடங்கியுள்ளன. இதனால் ஆபத்தான வைரஸ்கள் தன் இருப்பிடத்திலிருந்து வெளியேறி மனிதர்களுக்கு பெரிய ஆபத்தை தரக்கூடும் என  ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 ஜாம்பி வைரஸ்
பூமிப்பந்தின் ஒரு பகுதியில்   ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் பெர்மா ஃபாஸ்ட் என்ற பகுதிதான் ஆபத்தான வைரஸ்களின் உறைவிடமாக அமைந்துள்ளது. இதுகுறித்த   சில வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் பெரும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகலாம் எனத் தெரிவித்துள்ளனர்.  தொடர்ந்து 48,500 வருடங்களாக புதையுண்டு காணப்படும்  இவை வெளிவந்தால் பேராபத்து என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இந்த வைரஸ்கள், ‘ஜாம்பி வைரஸ்’ என அழைக்கப்படுகிறது. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது இது மீண்டும் ஒரு  அச்சத்தை விதைத்துள்ளது

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web