மேடையில் தொகுப்பாளினிக்கு மாலை போட்ட பிரபல நடிகர்!! அதிர்ச்சி வீடியோ!!
சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பாக்கியராஜ் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் தொகுப்பாளினி கூல் சுரேசை பேச அழைத்தார், ஆனால் அவர் தொகுப்பாளினி கழுத்தில் மாலையை அணிவித்து ஆச்சரியப்படுத்தினார். இச்செயல் தொகுப்பாளினியை மிகவும் கோபப்படுத்தியது. ’எல்லோருக்கும் மாலை போட்டிங்க..
நம்மை வித்தியாசமான வார்த்தைகளை கூறி வரவேற்பவருக்கு மாலை போட்டோமா?” என கூல் சுரேஷ் சமாளித்து காரணம் கூறினார். இருந்தாலும் இந்த சம்பவம் பத்திரிக்கையாளர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.நன்றி தெரிவிக்க வந்த நடிகர் மன்சூர் அலிகான் அவரிடம் ஒரு பெண் பத்திரிக்கையாளரிடம் கூல் சுரேஷ் இப்படி நடந்துக் கொள்ளலமா? என கேள்வி எழுப்பினார். கூல் சுரேஷ் செய்தது தவறு என்று கூறிய மன்சூர் அலிகான், அவர் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். மேலும் கூல் சுரேஷிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
ஆனால், கூல் சுரேஷ் .இந்நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்து நானும் அந்த பெண்ணும் பேசிக் கொண்டிருந்தோம் என கூறினார். பதிலுக்கு கோபமாக அந்த தொகுப்பாளினி ‘நான் உங்களிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை’ என பதில் அளித்துள்ளார். இதன் பிறகு தான் தான் தெரியாமல் அப்படி செய்துவிட்டதாகவும், மன்னிச்சுக்கோ தங்கச்சி’ அவர் மன்னிப்புக் கேட்டு, வருந்துகிறேன் எனக் கூறிவிட்டார். பலர் அவரது செயலை இன்னும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...