சிறையில் ஏ-கிளாஸ் கேட்ட பிரபல நடிகை...!!

 
மகாலட்சுமி

தமிழ் திரையுலகில் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் 2013ல் வெளியான ‘சுட்ட கதை’ படத்தில் தொடங்கி  தொர்ந்து, கொலை நோக்கு பார்வை, நளனும் நந்தினியும், நட்புன்னா என்ன தெரியுமா?, முருங்கைக்காய் சிப்ஸ் உட்பட பல   படங்களை தயாரித்தவர்.  

விஜே நடிகை மகாலட்சுமி

இவர் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் பிக்பாஸ் விமர்சகராக அடையாளம் காணப்பட்டவர்.குறிப்பாக நடிகை வனிதா பங்கேற்ற பிக்பாஸ் சீசன்4 தான் இவரை டிரெண்டிங் ஆக்கியது.  இந்நிலையில், கடந்தஆண்டு   சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமனம் செய்து கொண்டதை அடுத்து சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்தார். மகாலட்சுமி - ரவீந்தர் ஜோடி தங்களின் முதலாமாண்டு திருமண நாளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் கொண்டாடியதை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். 

மகாலட்சுமி


இந்நிலையில், சென்னையில் வசித்து வரும் பாலாஜியிடம்   கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி  2021ல் 16 கோடி மோசடி செய்ததாக மத்திய குற்றபிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் ரவீந்தரை போலீசார் கைது செய்துள்ளனர். இது போன்று மேலும் 2  பேரிடம் 8 கோடி மோசடி செய்திருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. 
 ரவீந்தருக்கு சிறையில் விஐபிக்களுக்கு வழங்கப்படும் A க்ளாஸ் வழங்கவேண்டும் என அவரது மனைவி மகாலட்சுமி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அத்துடன் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என இன்னொரு மனுவும் பதிவு செய்துள்ளார். 2  மனுக்களையும் நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web