லாரி, கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... 3 பேர் பரிதாப பலி!!

 
விபத்து

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் தோக்கவாடி அருகே பைபாஸ் சாலை அமைந்து உள்ளது. இந்த பைபாஸ் சாலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற காரும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற சரக்கு லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி பெரும் விபத்துக்குள்ளானது.

 விபத்து
இந்த விபத்தில் திருப்பத்தூர் மாவட்டம் காக்கனாம்பாளையம் பகுதியை சேர்ந்த யோகேஷ், மணிகண்டன் மற்றும் இவர்களுடன் சென்ற மேலும் ஒருவர் என 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து செங்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டத்து.

போலீஸ்

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (செப்.2) இரவு முழுவதும் மழை பெய்து வந்ததால், காரில் பயணம் செய்தவர்கள் தூக்க கலக்கத்தில் எதிரே வந்த லாரி மீது மோதி இத்தகைய விபத்து ஏற்பட்டதா? இயந்திரக் கோளாறு காரணமாக விபத்து நடக்க நேரிட்டதா என பல்வேறு கோணங்களில் செங்கம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web