தாய் குறித்து அவதூறு வீடியோ... நடிகர் அருண் விஜய் சார்பில் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்!

 
அருண் விஜய்

திரைப்பட நடிகர் அருண் விஜய், சென்னை ஈக்காட்டுத்தாங்கல் கலைமகள் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நடிகர் விஜயகுமாரின் மகனான இவர் 'பாண்டவர் பூமி', 'யானை', 'என்னை அறிந்தால்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நேற்று அருண் விஜய்யின் வழக்கறிஞர் ராகவன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் நடிகர் அருண் விஜய் மற்றும் அவரது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணு (அருண் விஜய்யின் தாய்) குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி சினி சமூகம் என்ற யூடியூப் சேனலில் 7 நிமிட வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த யூடியூப் சேனல், நடிகர் அருண் விஜய்யின் குடும்ப உறுப்பினர்கள் குறித்த எட்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளதாகவும், இதனால் அருண் விஜய் மன உளைச்சலில் இருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இந்த யூடியூப் சேனல் பார்வையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பல்வேறு பிரபலங்களின் தவறான படங்களை பதிவேற்றம் செய்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை முடக்க வேண்டும்,'' என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.இந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web