மதுபாட்டிலில் பல்லி... நீங்களே நியாயத்த சொல்லுங்கப்பா... குடிமகன்கள் கோரிக்கை... !!
தமிழகத்தில் பல பகுதிகளில் ஏற்கனவே உணவகங்களில் வாங்கும் உணவுகளில் பல்லி, கரப்பான்பூச்சி எலி கிடந்து பீதியை கிளப்பி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் இருந்து வருகின்றனர். தற்போது மதுபாட்டிலில் பல்லி இருப்பதாக குடிமகன் ஒருவர் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் குடிமகன்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நிம்மதிய தேடித் தான் சரக்கு அடிக்கிறோமே.. அதிலும் கலப்படமா என்னங்கடா இது... நாங்க என்ன பாவம் செஞ்சோம்... என குடிமகன்கள் புலம்பித் திரிகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஏரிக்கோடி பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன் . இவர் இன்று வீரகமோடு பகுதியில் அரசுக்கு சொந்தமான மதுபான கடையில் மது பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். மதுபாட்டிலை வாங்கி பார்த்த போது அதில் பல்லி ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் உடனடியாக மீண்டும் டாஸ்மாக் கடைக்கு சென்று இந்த மது பாட்டில் பல்லி உள்ளதைக் கூறினார். அத்துடன் இதை மாற்றித் தரும்படியும் கேட்டுள்ளார். அப்போது கடை ஊழியர்களுக்கும், பிரபாகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் தனது செல்போனில் அனைத்தையும் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவச் செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார். குடிமகன்களே நீங்களே நியாயத்த சொல்லுங்கப்பா...?
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!