கார் மீது லாரி மோதி கோர விபத்து.. தப்பியோடிய லாரி ஓட்டுநருக்கு வலை வீச்சு..!
கொள்ளிடம் பாலத்தில் கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி திவ்யா. இவர்களது 2 குழந்தைகள் மற்றும் மணிகண்டனின் தந்தை சுப்பிரமணியன் மற்றும் 5 பேரும் சிதம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து விட்டு காரில் குத்தாலம் திரும்பினர்.
அப்போது, சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி காரின் ஓரத்தில் மோதியது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து கொள்ளிடம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், காரில் சிக்கிய குழந்தைகள் உட்பட அனைவரையும் மீட்டு வந்தனர். பின்னர் காயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் காரை மீட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க