6 வருடக் காதலை மறுத்ததால் காதலியின் கழுத்தை அறுத்த காதலன்!! பயங்கரம்!!

 
ஜெயஸ்ரீ

 நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலை அடுத்த ஏனங்குடி ஊராட்சி, தேப்பிராமங்கலம் பகுதியில்  வசித்து வருபவர்  கமலபதி. இவரது மகள் ஜெயஸ்ரீ இவர் ஏனங்குடி  தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.   மருங்கூர் சத்திரம் மெயின்ரோடு பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் மணிகண்டன். இவர்   கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.  இவரும், ஜெயஸ்ரீயும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த காதல் ஜெயஸ்ரீயின் பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லை.  

கத்திக்குத்து

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜெயஸ்ரீயிடம் அவரது பெற்றோர், மணிகண்டனிடம் பேசுவதை நிறுத்திக் கொள் என அறிவுரை கூறினர்.   தனது பெற்றோர் கூறியபடி ஜெயஸ்ரீயும், மணிகண்டனுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.   மணிகண்டன் காதலி தன்னுடன் பேசாததால் ஜெயஸ்ரீ மீது ஆத்திரத்தில் இருந்தார்.  பள்ளிக்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய ஜெயஸ்ரீயை சந்தித்த மணிகண்டன், உன்னிடம் தனியாக பேச வேண்டும் எனக்கூறினார். ஆனால் அதற்கு  ஜெயஸ்ரீ ஒத்துக் கொள்ளவில்லை.  மணிகண்டன் விடாமல் கெஞ்சினார். இதனை நம்பி   ஜெயஸ்ரீ மணிகண்டனுடன் சென்றுள்ளார்.

ஆம்புலன்ஸ்

அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயஸ்ரீயின் கழுத்தை அறுத்து விட்டு மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.  
பின்னர், மணிகண்டன் கத்தியால் கழுத்தை அறுத்ததில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த ஜெயஸ்ரீயை   அக்கம் பக்கத்தினர், உடனடியாக மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஜெயஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்து இளைஞர்  கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web