பெரும் சோகம்... சாண்டிபுரா வைரசால் 4 வயது சிறுமி பரிதாப பலி!

இந்தியாவின் பல மாநிலங்களில் மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் மழைக்கால நோய்களும் பரவத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் புது வகையான சாண்டி புரா வைரஸ் பரவி வருகிறது. இந்த நோயினால் இப்பகுதியில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் மருத்துவமனை வார்டுகள் நிரம்பி வழிகின்றன. இந்த வைரஸ் தொற்று கடுமையான காய்ச்சல் மற்றும் மூளை அழற்சியை உருவாக்கி விடுகிறது. தற்போது இந்த புதிய வகை வைரஸ் பாதிப்பினால் தற்போது 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தரும் தகாவ்ல் வெளியாகியுள்ளன. மாநில சுகாதாரத்துறை இந்த சிறுமியின் மாதிரியை சோதனை செய்ததில் சாண்டிபுரா வைரசால் இவர் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதே போல் ராஜஸ்தான் மாநிலத்திலும் ஒருவர் இதே சாண்டிபுரா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த வைரஸ் பாதிப்பு தொற்று குறித்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா