பெரும் அதிர்ச்சி.. 2050-ல் அழிய போகும் பூமியின் பாதி பகுதி.. எச்சரிக்கை விடுத்த காலநிலை நிபுணர்..!
2050ஆம் ஆண்டுக்குள் பூமியில் பாதி காணாமல் போய்விடும் என நோபல் பரிசு பெற்ற காலநிலை நிபுணர் தெரிவித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் 22வது பட்டமளிப்பு விழா நடந்தது. நோபல் பரிசு பெற்ற காலநிலை, மற்றும் சுற்றாடல் நிபுணரான கலாநிதி மொஹான் முனசிங்க அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, காலநிலை, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பட்டம் பெற்ற 1725 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், வளர்ந்த நாடுகள் இயற்கை வளங்களை அதிகமாக நுகர்வதால் பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது, உலகின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏழை நாடுகள் அதிகம் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அழிவை ஏற்படுத்த ஆயுதங்களுக்கு செலவிடப்படும் தொகை 2 டிரில்லியன் டாலர்கள் என்றும், ஆனால் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக செலவிடப்படும் தொகை மிகவும் குறைவு என்றும் அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில், சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க உலக நாடுகளும், தலைவர்களும், குடிமக்களும் தவறினால், 2050-ம் ஆண்டுக்குள் பூமியின் பெரும் பகுதி அழிந்து விடும் என அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். , மற்றும் பல இனங்கள் அழியும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க