பாத்திரத்தில் தலை சிக்கிய சிறுத்தை ... வைரல் வீடியோ!

 
சிறுத்தை

மகாராஷ்டிரா மாநிலம்  துலே மாவட்டத்தில்  நேற்று  மார்ச் 2 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  ஆண் சிறுத்தை ஒன்று   தண்ணீர் தேடி வந்தது. எதிர்பாராதவிதமாக  ஆண் சிறுத்தையின்   தலை, தண்ணீர் இருந்த உலோகப் பாத்திரத்தில் சிக்கிவிட்டது.   இதனை அடுத்து,  அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  கால்நடை மருத்துவர்கள் சிறுத்தைக்கு மயக்க மருந்து கொடுத்தனர். இதனால் சிறுத்தை சிறிது நேரத்தில்  மயக்கமடைந்தது. 5 மணி நேர  போராட்டத்திற்குப் பிறகு  சிறுத்தை பத்திரமாக மீட்கப்பட்டது.  


 

தொடர்ந்து  கூண்டில் அடைக்கப்பட்ட ஆண் சிறுத்தையை அங்கிருந்து அழைத்துச் சென்று, அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் என  வனத்துறை வனச்சரக அலுவலர்  தெரிவித்துள்ளார்.   இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை குறித்த சமீபத்திய கணக்கெடுப்பின்படி   மகாராஷ்டிராவில் 2018ல்  1,690ஆக இருந்த சிறுத்தைகளின் எண்ணிக்கை, 2022ல்   1,985ஆக அதிகரித்துள்ளது.  அந்த வகையில்  இந்தியாவின் 2 வது அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகளைக் கொண்டுள்ள மாநிலமாகத் திகழ்கிறது. இது இந்தியாவில் உள்ள மொத்த சிறுத்தைகளின் எண்ணிக்கையில் 14 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுத்தை

 அதன்படி தற்போது  இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை  13,874 ஆக அதிகரித்துள்ளது. 2018ல் இருந்ததை காட்டிலும் 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது.  இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகள் உள்ள மாநிலமாக மத்தியப் பிரதேசம் முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் ”  மகாராஷ்டிராவை மத்திய இந்தியா மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில்  மெல்காட் புலிகள் காப்பகத்தில் அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகள் உள்ளன. இதனைத் தவிர்த்து தடோபா, நவேகான், சஹ்யாத்ரி மற்றும் பென்ச் ஆகிய இடங்களில் அதிக அளவில் சிறுத்தைகள் காணப்படுகின்றன ”என்பது குறிப்பிடத்தகுந்தது.
 
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web