கல்யாணமாகி ஒரு வருஷம் தான் ஆச்சு... நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை..!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மாளிகம்பட்டு தெற்கு தெருவில் வசித்து வருபவர் முத்து. இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் குருசாமியின் மகள் செல்வகுமாரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தனியாக வசித்து வந்தனர். செல்வகுமாரி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். கர்ப்பம் தரித்த பிறகு பெற்றோர் சமாதானம் ஆகினர்.
அடுத்த வாரம் வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் செல்வகுமாரிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. மருத்துவரிடம் சென்றுவந்த பிறகு வீட்டில் இருந்த செல்வகுமாரி துாக்குபோட்டு கொண்டார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே செல்வகுமாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பெண்ணின் தந்தை குருசாமி, காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்வகுமாரி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணமாகி ஓராண்டே ஆவதால் செல்குமாரியின் சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...