பள்ளிவேன் மீது தனியார் பேருந்து மோதி கோர விபத்து!! ஒருவர் படுகாயம்!!
மயிலாடுதுறை மாவட்டத்தில் சேந்தங்குடி பகுதியில் பள்ளி தனியார் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று காலை பள்ளி செல்லும் பிள்ளைகளை பள்ளியில் இறக்கிவிட்டுவிட்டு திரும்பி சென்று கொண்டிருந்தது. தனியார் பள்ளி வேன் ஒரு திருப்பத்தில் திரும்பிக் கொண்டிருந்த போது எதிரில் மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று அதிவேகமாக வேன்மீது மோதியது.
இதில் வேனில் முகப்பு பகுதி முற்றிலும் நொறுங்கி சிதறியது. வேன் ஓட்டுநர் துரை படுகாயம் அடைந்தார். பேருந்தில் இருந்தவர்கள் உடனடியாக வேன் ஓட்டுநரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி குழந்தைகளை வீட்டில் இறக்கிவிட்டு திரும்பும் பொழுது இந்த விபத்து நடைபெற்றதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தால் நடுரோட்டில் சிக்கிக் கொண்டிருந்த பேருந்தையும், வேனையும் பிரித்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!