அதிர்ச்சி.. தண்ணீர் தொட்டியில் செத்து கிடந்த நாய்க்குட்டி.. குற்றவாளிகளுக்கு வலைவீச்சு!

 
துட்டம்பட்டி கிராமம்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ளது துட்டம்பட்டி கிராம ஊராட்சி. இந்த ஊராட்சியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஆட்டையான்வட்டம் பகுதியில் உள்ள ஐந்து கிராமங்களின் பயன்பாட்டுக்காக தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து, அங்கன்வாடி மையம், அரசு நடுநிலைப்பள்ளி, கொடியன் வளவு, ஆட்டையான்வளவு, கண்டை வட்டம், ஆறான்வட்டம், அப்பாவட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கும் தண்ணீர் நிரப்பப்படுகிறது.

Water tank

இந்நிலையில், அங்கு சுற்றித் திரிந்த நாய்க்குட்டியை மர்ம நபர்கள் சிலர் அடித்து, தண்ணீர் தொட்டியில் போட்டுள்ளனர். இது தெரியாமல், தொட்டியில் தேங்கியிருந்த தண்ணீரை, மக்களுக்கும், மாணவர்களுக்கும் வினியோகம் செய்தனர். தொட்டியில் நாய் சடலம் கிடந்த தண்ணீரை சுத்தம் செய்யாமல் வினியோகம் செய்ததால், தண்ணீர் துர்நாற்றம் வீசியது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் விநியோகஸ்தர் ஆறுமுகத்திடம் தகவல் தெரிவித்தனர்.

அதன்பின், தண்ணீர் தொட்டியில் பார்த்தபோது, ​​ நாய்க்குட்டி ஒன்று தண்ணீரில் பிணமாக மிதந்தது. இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இறந்து கிடந்த நாய்க்குட்டியை வெளியே எடுத்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தப்போவதாக கூறி, தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீரை வெளியேற்றினர். அப்போது தொட்டியை முழுமையாக சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Villagers

அதன்பின், தண்ணீர் தொட்டியில் நாய்க்குட்டியை அடித்து கொன்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் எதிர்காலத்தில் வேறு எதையும் போடலாம். எனவே இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web