குடி போதையில் பள்ளிக்குள் காரை சொருகிய போதை ஆசாமிகள்.. தூக்கி வீசப்பட்ட மாணவன்..!

 
பள்ளி விபத்து

திருப்பூர் வித்யாலயம் பாரதி நகர் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 450க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் நாளை ஆண்டு விழா நடைபெற உள்ளதால் பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சிகளை ஒத்திகை பார்த்து கொண்டிருந்தனர்.

அரசு பள்ளி வளாகம்

இந்நிலையில் திருப்பூர் முருக்கம்பாளையம் பகுதியில் இருந்து பள்ளியை நோக்கி மின்னல் வேகத்தில் வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது. இதில் பள்ளி வளாகம் முன்பு நின்று கொண்டிருந்த 2 பேர் தூக்கி வீசப்பட்டனர். பின்னர், பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில், கலை நிகழ்ச்சிகளுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களும் விபத்தில் சிக்கினர்.

இந்த விபத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் தரணிநாதன் என்ற மாணவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். இதை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஓடி வந்தனர். அவர்கள் வருவதற்குள் கார் டிரைவரும் மற்றொரு நபரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். காருக்குள் சிக்கியிருந்த ஒருவரை மட்டும் பொதுமக்கள் தாக்கினர்.

விபத்தில் சிக்கிய கார்

சம்பவம் குறித்து பொலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் பலத்த காயமடைந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது காரை ஓட்டி வந்த கார்த்தி மற்றும் அவருடன் சென்ற செந்தில்குமார், கர்ணன் ஆகிய 3 பேர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web