லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பள்ளி மாணவி பலி... தந்தை கண் முன்னே பரிதாபம்...!!

 
ஜனுஷிகா


கடலூர் மாவட்டம் சிதம்பரம் காவிரிகாட்டூர் சொக்கலிங்கம் நகர் பகுதியில் வசித்து வருபவர்   ஜம்புலிங்கம். இவரது மகள் 8 வயது  ஜனுஷிகா.  இவர் வயலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.   ஜனுஷிகா தினமும் அவரது அம்மாவுடன் பைக்கில் பள்ளி செல்வது வழக்கம். இன்று அவர் வேறு வேலைக்கு சென்றுவிட்டதால்   ஜனுஷிகா, தனது தந்தை ஜம்புலிங்கத்துடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு புறப்பட்டார்.

ஜனுஷிகா


சிலுவைபுரம் அருகே பைக் சென்ற போது, புவனகிரி பகுதியில் இருந்து சிதம்பரம் வந்த டாரஸ் லாரி அதிவேகமாக எதிரில் வந்தது. ஒதுங்கலாம் என நினைத்த போது பைக் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ஜனுஷிகா மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதனால்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார். தந்தை ஜம்புலிங்கம்  படுகாயம் அடைந்தார்.  இந்த விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். தந்தை கண் முன்னே மகள் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கி மகள் துடிதுடித்து உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ்

அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் ஜனுஷிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜம்புலிங்கத்தை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அத்துடன்  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் தப்பி ஓடிய  லாரி ஓட்டுனரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web