திமுக நிர்வாகி மீது ஸ்கெட்ச் போட்டு கொலை வெறி தாக்குதல்!! பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

 
ராஜேந்திரன்

மதுரை காமராஜபுரத்தில் வசித்து வருபவர்  வி.கே.குருசாமி . இவர் திமுக மாநகராட்சி தலைவர். அதே ஊரை சேர்ந்த  ராஜபாண்டி அதிமுக முன்னாள் மாநகராட்சி மண்டலத் தலைவர்.  கடந்த 20 ஆண்டுகளாகவே இருவருக்கும் அரசியல்  முன்விரோதம் இருந்து வந்தது.  இதனால் அடிக்கடி இருதரப்பிலும் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் மாறி, மாறி மோதிக்கொண்டனர். அடுத்தடுத்து கொலைச் சம்பவங்களும் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தும்.   இருதரப்பினர் மீதும் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவாகியுள்ளன.

பல்வேறு கொலை  வழக்குகளில் சிக்கிய வி.கே.குருசாமி, அவரது மகன் மணி ஆகியோருக்கு மதுரையில் ஆபத்து இருப்பதை உணர்ந்து, இருவரும் வெளியூர்களில் தங்கியுள்ளனர். அங்கிருந்து   வழக்கு விசாரணைகளை சந்தித்து வருகின்றனர். ராஜபாண்டியின் நெருங்கிய உறவினர் வெள்ளக் காளி குருசாமியைக் கொலை செய்ய தொடர்ந்து திட்டமிட்டுள்ளார். ஜனவரியில் வி.கே.குருசாமி மதுரையிலுள்ள அவரது வீட்டுக்கு வருவதாக தகவல் அறிந்த வெள்ளக்காளி, வெளியூர் நபர்களைப் பயன்படுத்தி கொலை செய்ய முயற்சித்தார்.இதற்காக திருச்சியைச் சேர்ந்த லட்சுமணன் சகோதரர் ராமன்  கோவை, திண்டுக்கல், பழநி, திருச்சி பகுதியில் வசித்து வரும்  கூலிப்படையை ஏற்பாடு செய்தார். குருசாமியின் வீடு அருகே 6 பேர் ஆயுதங்களுடன் மேல அனுப்பானடி பகுதியில் பதுங்கி இருந்தனர்.

ராஜேந்திரன்


இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீரைத்துறை காவல் ஆய்வாளர் பெத்துராஜ்  , மேட்டுபட்டி ஜேசு ரூபன் (30), திருச்சி அரியமங்கலம் மணிகண்டன் ,  மதுரை காமராஜபுரம் மாதவன்  ,  மதுரை தென்பழஞ்சி ராஜேஷ் , பழநி அடிவாரம் பூபாலன் , எல்லீஸ் நகர் பாண்டியராஜன்  ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து, குருசாமியும், அவரது மகன் மணியும் தொடர்ந்து வெளியூர்களில் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.   நேற்றுமுன்தினம் மாலை பெங்களூரூவில்  உணவகத்தில் காப்பி குடிப்பதற்காக  நடந்து சென்றுள்ளார். அப்போது, அவரை 5 பேர்  கொண்ட கும்பல் காரில் பின் தொடர்ந்து சென்றது.   அவரை சுற்றி வளைத்து அவர்மீது அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால்  சரமாரியாக தாக்கியது.  நிலை குலைந்து அவர் கீழே விழுந்தபின், அக்கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.  

ஆம்புலன்ஸ்
பலத்த வெட்டுக்காயம் அடைந்த குருசாமியை அக்கம், பக்கத்தினர் மீட்டு, அருகிலுள்ள  மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு  தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.  வி.கே.குருசாமியை வெட்டி விட்டு தப்பிய கும்பல் மீது கொலை வழக்கு முயற்சி பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் மதுரையில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு கருதி காவல்துறையினர்  குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web