ஓய்வு பெற்ற ராணுவ வீரர்... பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி தலைமறைவு!

 
மம்தா

ஆந்திர மாநிலம் பூஜாரிவண்டலப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீதர்(36) - மம்தா (34) தம்பதி வசித்து வந்தனர். இதில் ஸ்ரீதர் 15 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி, கடந்த 2022ம் ஆண்டு ஓய்வு பெற்று வீடு திரும்பினார். அதன்பிறகு ஸ்ரீதர் வீட்டிலேயே இருந்து வருகிறார்.

அதே நேரம், அவர் ராணுவத்துக்கு பிறகு வீடு திரும்பியதில் இருந்து கணவன்- மனைவி இடையே தகராறு இருந்து வந்துள்ளது. ஸ்ரீதரின் தாயார் அதாவது மாமியாரின் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என மம்தா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் ஸ்ரீதர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பதால், தம்பதியினருக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

மம்தா

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மதுபோதையில் ஸ்ரீதர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் ஸ்ரீதர் போதையில் தூங்கச்சென்றுவிட்டார். எனினும் ஆத்திரம் தீராத மனைவி மம்தா, விபரீத முடிவெடுத்தார்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஸ்ரீதர் மீது மம்தா பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். உடலில் தீ பற்றியதால் ஸ்ரீதர் அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ஸ்ரீதரை மீட்டு பெங்களூரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் பலத்த தீக்காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். 

மம்தா

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. கணவன் இறந்த செய்தியை கேட்டு மனைவி மம்தா தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கணவனை கொன்று விட்டு தலைமறைவான மனைவி மம்தாவை தேடி வருகின்றனர். 

ஒரு புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web