அதிர்ச்சி.. வாழைத் தோட்டத்துக்குள் புகுந்த 10 அடி நீள முதலை.. பதறி அடித்து ஓடிய மக்கள்!

 
முதலை

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே, சிறுமுகை பகுதி, கந்தவயல் கிராமத்தில் தனிநபருக்கு சொந்தமான வாழைத் தோட்டம் உள்ளது. இந்நிலையில் இன்று தோட்டத்தில் பத்து அடி நீள முதலை புகுந்தது.  கந்தவயல் கிராமம் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் அமைந்துள்ளது.



இந்நிலையில்,  பத்து அடி நீளமுள்ள முதலை கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சிறுமுகை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர்  தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.



விசாரணை நடத்தி ஆய்வு செய்ததில் அணையின் நீர்த்தேக்க பகுதியில் இருந்து முதலை வெளியே வந்து வாழை தோட்டத்திற்குள் புகுந்தது தெரிய வந்தது. சேறும் சகதியுமான பகுதியில் முட்டையிடும் நோக்கில் முதலை வாழைத் தோட்டத்துக்குள் புகுந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web