சிமெண்ட் கலவையுடன் வயலுக்குள் பாய்ந்த லாரி!
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகே பாபநாசம் பகுதியில் சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி கொள்ளிடக்கரை வயலில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பாபநாசம் தாலுகா வாழ்க்கை கிராமத்தில், கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் கூட்டு குடிநீர் திட்ட தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சுவர் அமைக்கும் பணிக்கு தேவையான சிமெண்ட் கலவையை தஞ்சாவூரில் இருந்து வாழ்க்கை கிராமத்தின் வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கரையோரம் கலவை இயந்திர லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஒதுங்கிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கரையோரம் இருந்த வயலுக்குள் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் லாரி ஓட்டுநர் 45 வயது ஆரோக்கியராஜ் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிரேன் மூலம் வயலில் கவிழ்ந்த சிமெண்ட் கலவை லாரி மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
