அதிர்ச்சி.... உடலை அடக்கம் செய்த பிறகு வீடியோ காலில் அப்பாவுடன் பேசிய மகள்!!
பீகார் மாநிலம் அக்பர்பூர் மாவட்டத்தில் பூர்னியாவில் வசித்து வருபவர் பினோத் மண்டல். இவருடைய மகள் அன்சு.இவருக்கு வயது 23. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போய்விட்டார். இதனால் பினோத் தனது மகளைப் பல இடங்களில் தேடிப்பார்த்துவிட்டு மகளைக் காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. அதன்படி அங்குள்ள கால்வாய் ஒன்றில் பெண் ஒருவரின் உடல் கிடந்தது. அப்பெண்ணின் முகம் அடையாளம் தெரியாத படி சிதைக்கப்பட்டு இருந்தது.
அப்பெண்ணின் ஆடையைப் பார்த்து அவர்தான் தன் மகள் என்று கூறி உடலை வாங்கிச்சென்று தகனம் செய்துவிட்டார். மகளுக்கு இறுதிச்சடங்கு செய்யும் போது பினோத் துக்கம் தாளாமல் மயங்கி விழுந்து விட்டார். சமாளித்து உடலை தகனம் செய்து விட்டு வந்த பின்னர் பினோத் மொபைல் போனுக்குதோர் அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண் பினோத்திடம், "அப்பா நான் அன்சு உயிரோடுதான் இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார். தனக்கு திருமணம் நடந்து விட்டது எனவும், கணவரோடு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால்பினோத் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
அப்பெண் தங்களது மகள்தானா என்பதைத் தெரிந்து கொள்ள வீடியோ கால் மூலமும் பேசி உறுதி செய்து கொண்டார். "உயிரோடு இருப்பதாகச் சொன்ன பெண்ணிற்கு வீடியோ காலில் பேசினோம். அவர் தனது காதலனுடன் ஓடிவந்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதாகத் தெரிவித்துள்ளார்.” என காவல்துறை அதிகாரியும் தெரிவித்துள்ளார். ஆனால் அதே சமயம் எரிக்கப்பட்ட உடல் யாருடையது என உறுதி செய்யப்பட்டது அப்பெண்ணை அவரது குடும்பத்தினரே கொலை செய்துள்ளனர். பெண்ணின் பெற்றோர் வீட்டிற்குச் சென்று பார்த்த போது அவர்கள் வீட்டில் இல்லை. அவர்களைத் தேடி வருகிறோம்" என விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!