அதிர்ச்சி வீடியோ... ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழும் இளம்பெண்!!

கோவை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. அப்போது அவசரமாக வந்த இரு பெண்கள் அந்த ரயிலில் ஏற முயற்சி செய்தனர். அதில் ஒரு பெண் ரயிலில் ஏறிய நிலையில், மற்றொரு பெண் ஏறும்போது தவறுதலாக ரயிலில் இருந்து கீழே விழுந்து விட்டார்.
ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த இளம்பெண்#Coimbatore #TRAIN #CCTV pic.twitter.com/mNhGFJyFSh
— A1 (@Rukmang30340218) September 16, 2023
ரயில் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த நிலையில், தவறி விழுந்த பெண்ணை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் ராஜேஷ் கண்ணன், துரிதமாக செயல்பட்டு அந்த பெண் பயணியை நடைமேடைக்கு இழுத்து விபத்திலிருந்து காப்பாற்றினார். இந்த காட்சிகள் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
அதனைத் தொடர்ந்து, பெண்ணை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் ராஜேஷ் கண்ணன், ஓடும் ரயிலில் ஏற முயற்சிக்க கூடாது என அவர்களுக்கு அறிவுரை கூறினார். சமயோசிதமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றிய தலைமை காவலருக்கு ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீசார் மற்றும் பயணிகள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!