கோர விபத்து... பைக் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியான இளைஞர்!

 
கணேஷ்

ஆவடியை அடுத்த பட்டாபிராம், நேரு நகரைச் சேர்ந்தவர் கணேஷ் (37). வெல்டராக பணியாற்றி வரும் இவர், நேற்று முன்தினம் இரவு தண்டரை மேம்பாலம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ​​திருத்தணியில் இருந்து திருமுல்லைவாயில் நோக்கி சிமென்ட் லோடு ஏற்றிச் சென்ற கனரக லாரியை கணேஷ் முந்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்த கணேஷ் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கணேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து லாரி டிரைவர் திருத்தணி பெரியார் நகரை சேர்ந்த பார்த்தசாரதி (31) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 

From around the web