ஆகஸ்ட் 31 க்குள் ஆதாரை இணைப்பு கட்டாயம்!! இல்லன்னா சம்பளம் கட்!!
இந்தியா முழுவதும் கிராம மக்களின் முன்னேற்றத்தையும், வருவாயையும் பெருக்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2005ல் அறிமுகப்படுத்தப்பட்டது. வருடத்திற்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு இதன் மூலம் அளிக்கப்படும். பணிக்கு செல்பவர்களுக்கு சம்பளத்தொகை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட ஊரக உள்ளாட்சிகளில் பணிவாய்ப்பு வழங்கத் தவறினால், ஊதியத்தை அபராதமாக வழங்கவும் விதிகள் உள்ளன.
பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும் திட்டங்கள் அனைத்திலும், பயனாளிகளுக்கே உரிய தொகை செல்வதை உறுதி செய்யும் வகையில், வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இணைக்கப்படும் ஆதார் எண் சரிபார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் வங்கிக் கணக்கில் சம்பளத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்திலும், வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு, ஜனவரி 30ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதன்படி பிப்ரவரி 1ம் தேதி முதல் 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் சம்பளம் பெற ஆதார் இணைப்பு கட்டாயம் இல்லாவிட்டால் சம்பளம் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று, ஆகஸ்ட் 31 வரை ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. 100 நாள் வேலை அட்டை, வங்கிக் கணக்கு, ஆதார் எண் ஆகியவற்றை இணைக்க வேண்டும். இதற்காக வங்கியில் உரிய படிவத்தைப் பெற்று, பூர்த்திசெய்து வழங்க வேண்டும்.தமிழகத்தில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர், தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காமல், ஊதியம் பெற்று வருகின்றனர். இதனை களையும் வகையில் ஆகஸ்ட் 31க்குள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!