செம ஆபர்... ஆவின் நெய் ரூ 50 தள்ளுபடி... அதிரடி அறிவிப்பு...

 
நெய்

தமிழகம் முழுவதும் ஆவின் நிர்வாகம் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல்   பண்டிகை காலங்களில்   ஆவின் நெய் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து  ஆவின் மேலாண்மை இயக்குநர் செய்திக்குறிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.  

ஆவின்

அதில் “ தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் பொதுமக்கள் தேவைகளின் அடிப்படையில்  பல்வேறு வகையான பால் ,  நெய், வெண்ணெய், தயிர் , பனீர் , ஐஸ்கிரீம் மற்றும் நறுமண பால் வகைகளை  விற்பனை செய்து வருகிறது. இவை தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் உபபொருட்களின் விலையிலும் தரத்திலும் பொதுமக்கள் விரும்பும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 

ஆவின் நெய் விலை உயர்வு
இந்நிலையில் பண்டிகை காலங்களில் பொது மக்களிடையே ஆவின் பால் உபபொருட்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.   அந்த வகையில் பொதுமக்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் ஆவின் நெய்யினை எதிர்வரும் கிறிஸ்துமஸ் , புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  இன்று நவம்பர் 2 முதல்  நவம்பர் 20  வரை லிட்டர் ஒன்றுக்கு ரூ.50/- தள்ளுபடி செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை அதிரடி தள்ளுபடி விலையில் ஆவின் நெய்யினை பெற்று கொள்ளுமாறு  அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது ” என  அறிவித்துள்ளது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web