ஆரம்பிச்சுட்டாங்க... ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு அமலுக்கு வந்தது!

 
ஐஸ்கிரீம்

கோடைக்காலம் நெருங்க துவங்கி விட்டது. அடுத்த ஓரிரு வாரத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்படவுள்ள நிலையில், சத்தமில்லாமல் ஆவின் ஐஸ்கிரீம் வகைகள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்று மார்ச் 3 ம் தேதி முதல் ஆவின் சாக்லேட் அடிப்படையிலான ஐஸ்கிரீம் வகைகளின் விலையை உயர்வு அமலுக்கு வருகிறது.

திருத்தப்பட்ட ஆவின் ஐஸ்க்ரீம் விலைகள் பின்வருமாறு:

1. சாக்கோபார் (65 மில்லி): ₹25 (முன்பு ₹20)
2. வெண்ணிலா பந்து (125 மில்லி): ₹30 (முன்பு ₹28)
3. கிளாசிக் வெண்ணிலா கோன் (100 மில்லி): ₹35 (முன்பு ₹30)
4. கிளாசிக் சாக்லேட் கோன் (100 மில்லி): ₹35 (முன்பு ₹30)

ஐஸ்கிரீம்

உலக சந்தையில் கோகோ விலை அதிகரித்து வருவதால் விலையை மாற்றியமைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சில்லறை விற்பனையாளர்களின் கமிஷன்களை அதிகரிப்பதன் மூலம், முறையாக ஐஸ்கிரீம்கள் குளிர் சேமிப்பை உறுதி செய்வதையும், கெட்டுப் போவதைத் தடுப்பதையும் ஆவின் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையானது சில்லறை விற்பனையாளர்களுக்குப் பலனளிப்பது மட்டுமல்லாமல், வரவிருக்கும் கோடைகாலத்தில், அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளுக்கு மத்தியில் தயாரிப்பு தரத்தையும் நிலைநிறுத்தும் என எதிற்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web