அதிர்ச்சி... திகுதிகுவென பற்றி எரிந்த ஏடிஎம் மெஷின்.. தீயில் எரிந்து சாம்பலான லட்சங்கள்!!

 
ஏடிஎம்


 
சென்னை புழல் கேம்ப் நெடுஞ்சாலையில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  அதன் அருகே இந்தியா ஓன் என்ற தனியார் ஏடிஎம் மையமும் இருந்து வந்தது. வழக்கம் போல் நேற்று  வியாபாரம் முடிந்து ஊழியர்கள்  உணவகத்தை பூட்டிவிட்டு சென்றனர்.  இன்று அதிகாலை 4.30 மணிக்கு  ஓட்டல் அருகே இருந்த ஏடிஎம் மையம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.இந்த தீ உணவகத்திலும் பரவத் தொடங்கியது.  ஏடிஎம் மையம், உணவகம் இரண்டும் கொழுந்து விட்டு எரிந்தது. அந்த வழியாக வந்த அப்பகுதி மக்கள் தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து  காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

ஏடிஎம்

இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்குன்றம், மாதவரம்   தீயணைப்பு வாகனங்கள்  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் அடுத்தடுத்த கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கவும்  நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி வீரர்கள் தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் தனியார் ஏடிஎம் இயந்திரம்,  உணவகத்தில் இருந்த மேஜை நாற்காலி உட்பட  பல பொருட்கள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலாயின.

ஏடிஎம்


ஏடிஎம் இயந்திரம் முற்றிலும் எரிந்ததால் அதில் இருந்த பல லட்ச ரூபாய் தீயில் எரிந்து கருகியது . இது குறித்து வங்கி பணியாளர்கள் ஆய்வு செய்த பிறகே எவ்வளவு பணம் தீயில் கருகியது என்பது குறித்த தகவல் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீவிபத்து குறித்து  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மின் கசிவு காரணமாக ஏடிஎம் மையத்தில் தீப்பற்றி இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்வாய்ப்பாக  இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் உயிர்ச்சேதம்  எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web