பகீர் வீடியோ... பேருந்தை முந்த முயன்றதால் தூக்கி எறியப்பட்ட இளைஞர்.. !!

 
accident

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில்   பத்தேரி - புல்லுப்பள்ளி சாலையில் பேருந்து ஒன்று முன்னே சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை  பின்னால் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் முந்த முயன்றுள்ளார். இளைஞர் அந்தப் பேருந்தை முந்த முயலும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்து கொண்டிருந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி அந்த இளைஞர் சாலையில் தூக்கி வீசப்பட்டார்.


 

இந்த விபத்தில் அந்த இளைஞனுக்கு உடலில் பலத்த காயமும் ஏற்பட்டது. தலைக்கவசம் அணிந்திருந்ததால் பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் இருந்த மக்கள் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

ஆம்புலன்ஸ்

இது குறித்து பத்தேரி போலீசாரின் விசாரணையில் இளைஞர் கண்ணூர் மாவட்டத்தை சார்ந்த சுபின் என்பது தெரியவந்துள்ளது. மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் பேருந்தின் பின்னால் இருந்த கேமராவில் அந்த விபத்தின் காட்சிகளும் பதிவாகியுள்ளது. அந்த பதற வைக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web