கோர விபத்து... காரும் , டிராவல்ஸ் பேருந்தும் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி... 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்... !

 
விபத்து

சாலை விபத்துக்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்ட்டம் உளுந்தூர்பேட்டை அருகே லாரியின் மீது பின்னால் வந்த கார், தனியார் சொகுசு பேருந்து அடுத்தடுத்து மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.  இதில் காரில் பயணம் செய்த 2 பேர் உயிரிழந்த நிலையில், பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.  

விபத்து
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் சிப்காட் எதிரே திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.   கார் வருவதை கவனித்த லாரி  ஓட்டுனர் திடீரென வேகத்தை குறைத்துள்ளார். இந்நிலையில், லாரியின் பின்னால் வந்த கார் லாரி மீது மோதிவிட்டது.  . இதையடுத்து காரின் பின்னால் வந்த சொகுசு பேருந்து காரின் மீது மோதி சாலையின் இடது புறத்தில் இருந்த பள்ளத்தில் சாய்ந்தது.

ஆம்புலன்ஸ்

கார், லாரி, பேருந்து மூன்றும் அடுத்தடுத்து மோதியதில்  காரில் பயணம் செய்த திண்டுக்கல்லை சேர்ந்த தாய் மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல் தனியார் சொகுசு பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடனடியாக   படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web