பழனி கோவிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் .. ரசிகர்களுடன் செல்பி!!
2005ல் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான படம் ‘சந்திரமுகி’. இந்த திரைப்படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உட்பட பலர் நடித்து பிரம்மாண்டமான வெற்றி பெற்றது. அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடி , அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் படம் பெற்றது.
சந்திரமுகி 2 தற்போது இரண்டாம் பாகமாக பி.வாசு இயக்கத்தில் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே பலர் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.
லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், ஆர்.ஜி.ராஜசேகர் ஒளிப்பதிவில், தோட்டா தரணி கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் விநாயகர் சதுர்த்திக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப தடை காரணமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது. சந்திரமுகி - 2 இன்று வெளியான நிலையில், நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நேற்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அடிவாரத்தில் இருந்து மின்இழுவை ரயில் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி சன்னதிக்கு சென்று முருகப்பெருமானை மனமுருக வேண்டினார்.
கோவில் உட்பிரகாரத்தில் உள்ள போகர் சித்தர் சன்னதிக்கு சென்று, சுமார் 10 நிமிடம் தியானம் செய்தார். அப்போது அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனையடுத்து மின்இழுவை ரயில் வழியாக அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்துக்கு சென்று வழிபட்டார்.நடிகர் ராகவா லாரன்சுடன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...