ஜூன் 17ல் மாணவர்களை நேரில் சந்தித்து சான்றிதழ்.. வாழ்த்து.. நடிகர் விஜய் அறிவிப்பு!

 
விஜய் மாணவிகள்

தமிழகத்தில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சமீபத்தில் உலக பட்டினி தினத்தில்  234 தொகுதிகளில் உணவு வழங்கி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை முன்னெடுக்கவும் மேலிடத்திலிருந்து உத்தரவு பறந்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடத்தை பிடித்தவர்களுக்கு சிறப்புபரிசுகள் வழங்க இருப்பதாகவும் அதற்கான பட்டியலை தயாரிக்கவும் உத்தரவு பறந்துள்ளது. இதன் அடிப்படையில் விஜய் மக்கள் இயக்க தொண்டர்கள் அதற்கான பணிகளில் மும்மூரமாக ஈடுபட்டுள்ளனர்.

விஜய்

இந்நிலையில் ஜூன் 17ம் தேதி மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   விரைவில் நடிகர்  விஜய்  அரசியல் கட்சி தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் முன்னோட்டமாக  தான் விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.  தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தல் .நலத்திட்ட உதவிகள் என அரசியல் சார்புடைய பல்வேறு நிகழ்வுகளில் விஜய் மக்கள் இயக்கம் சமீபகாலமாக  தங்களை ஈடுபடுத்தி வருகிறது 
இதுகுறித்து அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர் புஸ்ஸிஸி. N.ஆனந்த் செய்திக்குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

விஜய்

அதில்  , "தளபதி விஜய்" அவர்களின் சொல்லுக்கிணங்க,  ஜூன் 17ம் தேதி  "அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K Convention Centre-ல் 2023ம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு  பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3  இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு "தளபதி விஜய்" அவர்கள் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்துவார் எனக் கூறியுள்ளார்.  இந்த தகவல்கள் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web