நடிகர் விஜயகாந்த்தின் ஆஸ்தான வசனகர்த்தா வேலுமணி காலமானார்... திரையுலகில் சோகம்!!

 
வேலுமணி

 தமிழ் திரையுலகின் பிரபல வசனகர்த்தா வேலுமணி மாரடைப்பு காரணமாக காலமானார். இவருக்கு வயது 55. இவர் விஜயகாந்த் படங்களின் ஆஸ்தான வசனகர்த்தா என்பது குறிப்பிடத்தக்கது. இவரது  திடீர் மறைவு விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது திரையுலகில்   பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 கடந்த சில நாட்களாக நடிகர் விஜயகாந்த்  மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் பிரபல தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை. அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது.  

இதனையடுத்து, சமூக வலைத்தளங்களிலும், இணையதளங்களிலும், யூ-ட்யூப் சேனல்களிலும் நடிகர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து  வதந்திகள் வலம் வரத் தொடங்கியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜயகாந்த் மனைவி  கேப்டனுடன் இருக்கும் புகைப்படங்களை  வெளியிட்டு இருந்தார். அத்துடன் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.இந்நிலையில், நடிகர் விஜயகாந்தின் ஆஸ்தான வசனகர்த்தா  வேலுமணி விஜயகாந்த் உடல் நலம் குறித்த செய்திகள் பரவ தொடங்கியதும்  அதிர்ச்சியில் ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலுமணி
விஜயகாந்த் நடித்த ’தேவன்’, ’எங்கள் ஆசான்’, ’விருதகிரி’  படங்களுக்கு வசனம் எழுதியவர் வேலுமணி. கடலூரைச் சேர்ந்த வேலுமணி 30 ஆண்டுகளுக்கு முன்பே திரைத்துறையில் அடியெடுத்து வைத்தவர். இவர்  கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். அத்துடன்  அவரின் ’மூன்றாம் உலகம்’ புத்தகம் உருவாவதற்கும் பெரிதும் உறுதுணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த்
 இயக்குநர் வஸந்தின் ’பூவெல்லாம் கேட்டுப்பார்’, ’ரிதம்’  என பல  பல படங்களில் உதவி இயக்குநராகவும் வேலுமணி பணிபுரிந்தவர்.  சினிமா ,  அரசியல் என நீண்டகாலம் நடிகர் விஜயகாந்த்  வேலுமணியிடம் கலந்து ஆலோசிப்பதை வழக்கமாக வைத்து இருந்தார்  .  நடிகர் விஜயகாந்தின் அன்பை பெற்றவர், அவர் உடல் நலிவடைந்து ஓய்வில் இருந்த போதும் ஓரிருமுறை நேரில் சென்று சந்தித்து வந்தார்.  கடந்த சில வருடங்களாக சந்திக்க கூட முடியவில்லை என்கிற ஏக்கமும் இருந்து வந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  
இந்நிலையில், நேற்று மாலை விஜயகாந்த் உடல்நிலை குறித்தான செய்திகளை கேட்டவர் மனமுடைந்து நேற்றிரவு சோர்வாக காணப்பட்டார்.  காலையில் அவர் உடல் நிலை சீரில்லாமல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.  வேலுமணி திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு தங்கை, தம்பி  மட்டுமே.  இவரது திடீர் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web