’நான் தோற்றுவிட்டேன்’.. சோகமான பதிவு போட்ட நடிகை நயன்தாரா!

 
நயன்தாரா

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா, 40 வயதை நெருங்கியும், இன்றும் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார் நயன். தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் இவர்தான். அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு ஷாருக்கானுடன் இணைந்து பாலிவுட்டில் வெளியான ஜவான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது, தற்போது இந்தியிலும் நயனுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.

நடிகை நயன்தாரா தற்போது சசிகாந்த் இயக்கத்தில் டெஸ்ட், யூடியூபர் டியூட் விக்கியின் இயக்கத்தில் மண்ணாங்கட்டி மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம், விக்னேஷ் சிவனின் எல்ஐசி ஆகிய படங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நயன், பல்வேறு தொழில்களை தன் வசம் வைத்துள்ளார்.

சினிமா மட்டுமின்றி வியாபாரத்திலும் கொடிகட்டி பறக்கும் நயன்தாரா, 2022ல் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிக்கு உயிர், உலகம் என்ற இரட்டை மகன்களும் உள்ளனர். கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்த நயன்தாரா, தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் படங்களை தொடர்ந்து பதிவிடுகிறார். ஆனால் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கணவர் விக்னேஷ் சிவனுடனான  சர்ச்சையை கிளப்பியது.

இதனால் இருவருக்கும் இடையே சண்டை நடந்ததாக பேச்சு எழுந்தது. ஏற்கனவே விவாகரத்து சர்ச்சை வலுத்து வரும் நிலையில், நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'நான் தோற்றுவிட்டேன்' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் விக்னேஷ் சிவனுடன் சண்டை போட்டு இதை பதிவிட்டாரா அல்லது ஏதாவது விளம்பரத்துக்கான பதிவா என குழப்பத்தில் உள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web