செம... சந்திராயன் 3 ஐ தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1!!

 
ஆதித்யா எல்1

ஜூலை 14ம் தேதி ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான்3  விண்ணில்  செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து  40 நாள் பயணத்தை மேற்கொண்டது.   பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் நேற்று தடம் பதித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.அந்த வகையில் நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்யும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.இது குறித்து  மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு  வாழ்த்து கூறியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா எதிர்காலத்திற்கான புதிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது.நிலவினை தொடர்ந்து  சூரியன் மற்றும் வீனஸ் பிற கிரகங்களை ஆராயும் பயணங்களையும் அடுத்தடுத்து  மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.  

சந்திராயன் 3

அதே நேரத்தில்  2030 ம் ஆண்டுக்குள் விண்வெளி சுற்றுலாத் தொழிலைத் தொடங்குவது குறித்த கனவு  லட்சியத் திட்டங்களையும் இந்தியா தொடங்கும் எனக் கூறியுள்ளார்.  இந்த வெற்றியைத் தொடா்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல் 1 விண்கலம்  செப்டம்பரில் விண்ணில் ஏவப்படும்.  சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல்1 விண்கலத்தை ஏவுவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்  தயாராகி வருகிறது. இந்த விண்கலம் பெங்களூரு யூ ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விண்கலம்  பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் விண்வெளியில் ஏவப்படும்.   ஆதித்யா-எல்1 சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்வெளி பயணம்.  பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள சூரிய-பூமி அமைப்பின் லாக்ரேஞ்ச் புள்ளியை   சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் ஆதித்யா விண்கலம் ஏவப்படும்.  

ஆதித்யா எல்1


எல்1 புள்ளியைச் சுற்றியுள்ள ஒளிவட்டப் பாதையில் வைக்கப்படும் ஆதித்யா விண்கலம், சூரியனை எந்த மறைவும் இல்லாமல் தொடர்ந்து கண்காணித்து முக்கிய செய்திகளை அனுப்பும்.  
மின்காந்த துகள் மற்றும் காந்தப்புல கண்டுபிடிப்பான்களை பயன்படுத்தி ஒளிக்கோளம், குரோமோஸ்பியர் மற்றும் சூரியனின் வெளிப்புற அடுக்குகளை கண்காணிக்க ஏழு பேலோடுகளை இந்த விண்கலம் சுமந்து செல்லும். சிறப்பு வான்டேஜ் பாயின்ட் எல்1 ஐப் பயன்படுத்தி, 4 பேலோடுகள் சூரியனை நேரடியாகப் பார்க்கின்றன.  மீதமுள்ள 3 பேலோடுகள் லாக்ரேஞ்ச் புள்ளி எல்1 இல் உள்ள துகள்கள் மற்றும் புலங்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்கின்றன.ஆதித்யா எல்1 பேலோடுகளின் சூட்கள், கரோனல் வெப்பமாக்கல், கரோனல் மாஸ் எஜெக்ஷன், ப்ரீ-ஃப்ளேர் மற்றும் ஃப்ளேயர் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பண்புகள், விண்வெளி வானிலையின் இயக்கவியல், துகள் மற்றும் புலங்களின் பரவல் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதற்கான மிக முக்கியமான தகவல்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web